முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வட மாகாணத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி மீள அனுப்பப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் சென்று கூறியிருப்பது விந்தையான செயல்

357

தான் முதலமைச்சராக இருந்த காலத்தில் வட மாகாணத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி மீள அனுப்பப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் சென்று கூறியிருப்பது விந்தையான செயல் என முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் மேற்படி கருத்துக்கு பதிலளித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு இன்று (11) அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தனது தலைமையிலான வட மாகாண சபையின் ஆயூட்காலம் முடிந்த பின்னரும் மத்திய அரசாங்கத்தால் வட மாகாணத்திற்கு வழங்க வேண்டிய ஒரு தொகை நிதி இதுவரை நிலுவையில் உள்ளதாகவும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் பிறநாடுகளில் கருத்து தெரிவிக்கும் போது உண்மையை அறிந்து பேச வேண்டியது முக்கியம் எனவும் இலங்கையின் அரசியல் மேடைகளில் பேசுவது போல் பேசக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனூடாக 13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் மத்திய அரசாங்கம் தமக்கென ஒரு பிரத்தியேக அதிகாரப் பகிர்வை மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *