வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான முன்வரைவை வலுப்படுடுத்தக் கோரியும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும், சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றினூடாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் இதய சுத்தியுடன் செயற்பட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று காலை, யாழ்ப்பாணம் ங்கிலியன் பூங்காவில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு, நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதிகள் அலுவகம் வரை சென்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு, கிளிநொச்சி பழைய கச்சேரி வரை சென்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்தப் போராட்டங்களில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற பேரணியின் முடிவில், ஐக்கிய நாடுகள் சபையில் அனுசரணை நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முதல் வரைவில் அவசரமாக மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமென்று வலியுறுத்தும் மனு ஒன்றும், சிவில் அமைப்புக்களால் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.