வவுனியா காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த 16 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவு, சிறப்பு காவல்துறை பிரிவு, மற்றும், வவுனியா காவல்துறை தலைமையகம் ஆகியவற்றில் பணியாற்றும் அதிகாரிகளுக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 சந்தேக நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போதே, காவல்துறை அதிகாரிகளுக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, தொற்றுக்குள்ளான காவல்துறை அதிகாரிகளுடன் தொடர்புபட்டிருந்த 35 காவல்துறை அதிகாரிகள், ஓமந்தை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்ட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.