வெனிசுவேலாவில் தற்பொழுது நிலவி வரும் சர்ச்சைகளுக்கு அமெரிக்கா முழுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரச தலைவர் நிக்கொலெஸ் மடூரோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் ட்றம்ப் மற்றும் அவரது அரசாங்கம் ஓர் கடும்போக்குவாத கும்பல் என்று மடுரோ பகிரங்கக் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
சர்வதேச செய்தி சேவைகளில் ஒன்றான பிபிசிக்கு அளித்த நேர்காலில் அவர் இதனைத் தெரிpவத்துள்ளார்.
அமெரிக்கா, வெனிசுவேலாவில் தலையீடு செய்யும் நோக்கில் நாட்டுக்கு உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பதாகத் மரூரோ கடுமையான அதிருப்தி வெளியிடடுள்ளார்.
வெள்ளை மாளிகையில் உள்ள கடும்போக்குவாதிகளுக்கு விரைவில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.