ஹொங்கொங்கில் ஜனநாயக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டமைக்கு கனடா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து கடுமையான கண்டத்தை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹொங்கொங்கில் 55 ஜனநாயக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அவர்களின் கைதுக்கான காரணம் எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை. அரச விரோதச் செயற்பாட்டில் ஈடுபட்டார்கள் என்றே கூறப்பட்டது.
இருப்பினும் இதன் பின்னணியில் சீனா இருப்பதாக தகவல்கள் உள்ளன. இந்நிலையிலேயே கனடா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.