முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

20 பேருக்கு வடக்கு மாகாணத்தில் நேற்று கொரோனா

255

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் உள்ளிட்ட, 20 பேருக்கு வடக்கு மாகாணத்தில் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், மெலிஞ்சிமுனையில் 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நவாலியைச் சேர்ந்த ஒருவருக்கும், கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கும்,  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்னார் நகரில் உள்ள கொமர்ஷல் கிரடிட் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த 5 பேருக்கும் நேற்று தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணியாற்றும் இருவருக்கும், மன்னார் மாந்தை மேற்கு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும், மன்னார் நகரில் சலூன் தொற்றாளர்களுடன் தொடர்புடைய ஒருவருக்கும் நேற்று தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *