இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தேச புதிய சட்டம் விரைவில் நாடாளுமன்றிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், பிரித்தானியாவின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு நிகராக புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் பழைய பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 26ம் நாள் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிiமைப் பேரவையின் அமர்வுகள் ஆரம்பாகவுள்ள நிலையில், இந்த உத்தேச சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுளளது.
கடந்த ஜெனீவா கூட்டத்தொடருக்கு சில நாட்கள் முன்னதாகவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகத்தை அமைப்பதான அறிவிப்பு இல்ஙகை அரசினால் வெளியிடப்பட்ட போதிலும், அமைக்கப்பட்ட பணியகம் குறித்த மேலதிக நடவடிக்கைகள் தொட்ர்பில் எந்தவித காத்திரமான செயற்பாடுகளும் இதுவரை முன்னெடுக்கப்படாது உள்ளமை குறிப்பிடத்தக்கது.