கனடிய பூர்வகுடியின சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சிறுமியர் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் இனச்சுத்திகரிப்பு என்ற பதத்தை பயன்படுத்த முடியுமா என்பது ஆராயப்பட உள்ளது.
மத்திய அரசாங்கம் இந்தச் சொல்லை பயன்படுத்துவது தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக நீதி அமைச்சர் டேவிட் லாமெட்டி (னுயஎனை டுயஅநவவi.) தெரிவித்துள்ளார்.
பூர்வகுடியின பெண்கள் சிறுமியர் இனச் சுத்திகரிப்பிற்கு உட்படுத்தப்பட்டனர் என அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்டபட்டுள்ளது.
இந்த நிலையில், இனச் சுத்திகரிப்பு என்ற பெயரை பயன்படுத்டத முடியுமா என்பது தொடர்பில் நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஆய்வு செய்ய வேண்டுமென நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும்ட நியாயத்தையும் வழங்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உண்டு என தெரிவித்துள்ளார்.
பூர்வகுடிப் பெண்களும், சிறுமிகளும் கொல்லப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை என்பன தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட ஆணைக்குழு அதன் அறிக்கை ஒடாவா பிராந்தியத்தின் (பு)கட்னோவில் கனேடிய வரலாற்று அரும்பொருட் காட்சியகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிடம் கையளிக்கப்பட்டது.





