பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வுக்கும் ஒன்ராறியோ முதல்வர் டக் போர் க்கும் இடையிலான சந்திப்பொன்று ஒட்டாவாவில் இடம்பெற்றுள்ளது.
சுகாதாரப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முன்னுரிமை அளிக்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து இருவரும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்
இந்தச் சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட், தேர்தல் பிரச்சாரத்தின்போது தனக்கு எதிரான ட்ரூடோவின் கருத்துக்கள் குறித்து எதிர்மறையான எண்ணங்களை தான் கொண்டிருக்கவில்லை எனக் கூறினார்.
என் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் அல்ல. அரசியலில் இவ்வாறான விமர்சனங்கள் சாதாரணமானவை. தேர்தல் பிரசாரத்துடன் அந்தப் பிரச்சினை முடிந்துவிட்டன.
இனி நாங்கள் இணைந்து பணியாற்ற ஆரம்பிக்கலாம் என பிரதரிடம் தெரிவித்தேன். பிரதமரும் அதனை ஒப்புக்கொண்டார் எனவும் டக் போர்ட் கூறினார்.
உட்கட்டமைப்பு, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து மத்திய அரசுடன் ஒத்துழைத்துச் செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மேற்கின் பிரிவினைக் கோரிக்கைகளை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
அனைத்து மக்களும் ஒன்றுபட்டு கனடாவின் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் வெளியிட்டார்.