டெல்லியில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, கனடாவில் கார் பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது.
கனடாவிலுள்ள இந்திய வம்சாவளியினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பேரணியில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கெடுத்து பதாதைகள் மற்றும் கொடிகளை காட்சிப்படுத்தியவாறு சென்றனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் லோயர் மெயின்லேண்டின் சர்ரே பகுதியில் இருந்து வான்கூவரில் உள்ள இந்திய துணை தூதரகம் வரை இந்த பேரணி நடைபெற்றது.
கனடாவிலுள்ள இந்தோ- கனடிய சமூகத்தில் பலர் இந்தியாவின் பஞ்சாப் பிராந்தியத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.





