வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் 22 பேர் கடும் குளிருக்கு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் இந்த போராட்டம் காரணமாக புகையிரத துறைக்கு இரண்டாயிரம் கோடி ரூபா வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்புதெரிவித்து பஞ்சாப் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் பல்வேறு கட்ட போரட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாய பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும் வேளாண் சட்டத்தை திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்