தடையை மீறி உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
உண்ணாவிரத போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், தடையைமீறி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் மீது, 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.