பீஹார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்வின் சிறுநீரகம் முற்றாக செயலிழக்கும் கட்டத்தை எட்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் நிறுவனரும், பீஹார் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் 2017-ம் ஆண்டு குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுநீரகப் பாதிப்பு காரணமாக, கடந்த பல மாதங்களாக ராஞ்சியிலுள்ள அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது சிறுநீரகம் 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது லாலுவின் சிறுநீரகம் 25 சதவீதம் மட்டுமே செயல்படுவதால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், மருத்துவக் குழுவினர் அறிவித்துள்ளனர்.