ரஷ்யாவில் மீன்பிடிக் கப்பல் ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 17 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.
ரஷ்யாவின் வடக்கு பகுதியில் பாரென்ட்ஸ் (Barents) கடலில் 19 மீனவர்களுடன் சென்ற மீன்பிடி கப்பல் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்றுக் காலை தகவல் அறிந்து விரைந்து சென்ற ரஷ்ய கடலோர காவல்படை தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு, 2 மீனவர்களை மட்டுமே காப்பாற்றியுள்ளது.
ஏனைய 17 மீனவர்களும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.