கொரோனா வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்யும், சர்வதேச நிபுணர் குழுவை அனுமதிப்பதற்குத் தயார் என சீன அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில், சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக சர்வதேச நிபுணர் குழுவை ஜனவரி முதல் வாரத்தில் சீனாவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்திருந்தது.
இந்த சிறப்புக் குழு வுகான் நகரில், மனிதர்களுக்கு முதன் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட இடங்களில் முழுமையாக ஆய்வு செய்யும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது,
எனினும், நிபுணர் குழுவுக்கு சீன அரசு அனுமதி அளிக்கவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சீனா தற்போது, சர்வதேச நிபுணர் குழுவை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.