சிறிலங்கா அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி இதுவரை கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
‘வங்கக்கடலில் கச்சத்தீவை ஒட்டிய பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்களப்படையினர் கற்களை வீசித் தாக்கியதுடன், 9 மீனவர்களையும் கைது செய்திருப்பதாக வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
பன்னாட்டு விதிகளுக்கு எதிராக தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், படகுகளை சிறைப்பிடிப்பதும் கண்டிக்கத்தக்கவை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்