தாமாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “முதல் கட்டமாக புனேவிலிருந்து தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தை முதற்கட்டமாக வந்தடைந்த 5.56 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் தடுப்பூசி மருந்துகள் 10 நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பாரத் பயோ டெக் (Bharat Bio Tech) நிறுவனத்திடம் இருந்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வரவுள்ளது என்றார்.