மகர சங்கராந்தி நன்னாளான இன்று புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகவுள்ளன.
கடந்த 11ஆம் திகதி இதற்கான ஒப்புதலை பாரம்பரிய பராமரிப்பு குழு அளித்துள்ளதுள்ளதுடன், உச்சநீதிமன்றமும் இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.
இதனை அடுத்து இன்று இதற்கான கட்டுமானப்பணிகள் ஆரம்பமாகவுள்ளன.
கடந்த டிசம்பர் 10ஆம் திகதி பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றத்திற்கான அடிக்கல் நாட்டினார். 971 கோடி ரூபா செலவில் 22 மாதங்களில் இப்பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிதாகக் கட்டப்படும் நாடாளுமன்ற வளாகத்தில் கூட்டுக் கூட்டம் நடைபெறும் போது அரங்கில் 1200க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் வகையில் வசதி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.