ஸ்புட்னிக் (Sputnik) கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டச் சோதனையை இந்தியாவில் மேற்கொள்ளத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்புட்னிக்(Sputnik) கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்கவும் விற்கவும் டொக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் (Docter Reddy’s Laboratories) நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது.
இந்தத் தடுப்பு மருந்தை நபர்களுக்கு செலுத்தி இரண்டு கட்டச் சோதனைகள் முடிந்துள்ள நிலையில் மூன்றாம் கட்டச் சோதனை கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.