இந்தியாவுக்கு அதிநவீன போர் விமானங்களை விற்பனை செய்ய போயிங் நிறுவனத்துக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய விமானப் படையில் இருக்கும் பழைய போர் விமானங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கிவிட்டு புதிய ரக போர் விமானங்களை கொள்வனவு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி போயிங் தயாரித்துள்ள ‘எப்-15 எக்ஸ்’ என்ற அதிநவீன போர் விமானத்தை கொள்வனவு செய்ய இந்திய விமானப்படை விண்ணப்பித்திருந்தது.
இந்நிலையில் இந்த போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்க போயிங் நிறுவனத்துக்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை போயிங் நிறுவன உயரதிகாரி அங்குர் கனக்லேகர் உறுதிபடுத்தியுள்ளார்.