அமெரிக்க தூதர அதிகாரிகள் 10 பேரை நாட்டை விட்டு வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க அரசுத் துறைகள் மீது இணையவழி தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக ரஷ்யாவைச் சேர்ந்த 32 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
அத்துடன், ரஷ்யாவை சேர்ந்த 10 தூதரக அதிகாரிகளையும், நாட்டை விட்டு வெளியேறுமாறு, அமெரிக்க அரசு உத்தரவிட்டது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்யா இதற்கு பதிலடியாக, மொஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும், 10 தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றப் போவதாக கூறி உள்ளது.
அத்துடன், அமெரிக்காவைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் 8 பேரின் பெயர்களை தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.
அமெரிக்க சட்டமா அதிபர் மெரிக் கார்லண்ட் (Merrick Garland), தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் அவ்ரில் ஹெய்ன்ஸ் (Avril Haines) , எவ்பிஐ எனப்படும், சமஷ்டி புலனாய்வு பிரிவின் இயக்குனர் கிறிஸ்டோபர் ரே (Chris Wray), மற்றும் அமெரிக்க உள்நாட்டு கொள்கை ஆலோசகர் சூசன் ரைஸ் (Susan Rice)ஆகியோரும் தடை செய்யப்பட்டுள்ளவர்களில் அடங்கியுள்ளனர்.