பிரதமர் நரேந்திர மோடியின் போர்ச்சுக்கல் பயணம், கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின், 16வது மாநாடு, போர்ச்சுக்கல் நாட்டில் மே, 8 ஆம் நாள் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக பங்கேற்க திட்டமிட்டிருந்தார். கொரோனா பரவல் காரணமாக, பிரதமரின் போர்ச்சுக்கல் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மாநாட்டை மெய்நிகர் முறையில் நடத்துவதற்கும், முடிவு செய்யப்பட்டுள்ளது





