முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

500 மற்றும் 1000 ரூபா பணத் தாள்கள் இன்றிலிருந்து செல்லுபடியாகாது – இந்தியப் பிரதமரின் அறிவிப்புக்கு வரவேற்பு

1222

இன்று முதல் 500 மற்றும் 1000 ரூபா பணத் தாள்கள் செல்லாது என்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு நாட்டில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற போது, கறுப்பு பணத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதை தொடர்ந்து, நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் குறித்த இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் பணத் தாள்களை எதிர்வரும் 10ஆம் நாள் முதல் டிசம்பர் மாதம் 30ஆம் நாள் வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாகவே இதனை மேற்கொள்வதாகவும், கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 1.25 இலட்சம் கோடி கறுப்பு பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும், எனினும் இன்னமும் கோடிக்கணக்கில் கறுப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளதுடன், இந்த கறுப்பு பணமும், ஊழலும் நாட்டின் வளர்ச்சிக்கும், ஏழைகளின் முன்னேற்றத்துக்கும் தடைக்கல்லாக உள்ளதாகவும் அவர் விபரித்துள்ளார்.

உலகளாவிய அளவில் பொருளாதாரத்தில் அதிவேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ள அதேநேரம், ஊழல் நாடுகளின் பட்டியலிலும் இந்தியா முதல் வரிசையில் உள்ளதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு சனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களின் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதற்கு எதிர்ப்பு வெளியிட்டதுடன், இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, கேரள நிதி அமைச்சர் தோமஸ், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் இதனை வரவேற்றுள்ள போதிலும், விமர்சனங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாதிநிதி இது தொடாபில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 500 ரூபாய், 1000 ரூபாய் பணத் தாள்கள் செல்லாது என்ற மோடியின் நடவடிக்கையை வரவேற்கும் அதேவேளையில், இந்த நடவடிக்கையால் சாதாரண, நடுத்தர ஏழை எளிய மக்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *