ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலை தொடர்பாக, 3 அல்லது 4 நாட்களில் மாநில ஆளுநரே முடிவெடுப்பார் என்று, உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழக ஆளுநருக்கு 2015ஆம் ஆண்டு அனுப்பிய கருணை மனு மீதும், 2018ல் அமைச்சரவையின் தீர்மானம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உச்சநீதிமன்றமே இந்த விவகாரத்தில் முடிவெடுத்து விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும், என்று பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு தான் உள்ளது என்று மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்தநிலையில் இன்று திடீர் திருப்பமாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.
‛ஜனாதிபதிக்குப் பதிலாக மாநில ஆளுநரே 3 அல்லது 4 நாட்களில் முடிவு செய்வார், என்று என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.