ஒன்டாரியோ முதல்வர் ட்க் ஃபோர்ட் தலைமையிலான புறோகிரசிவ் கொன்சவேடிவ் மாகாண அரசு எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்டாரியோவின் அரச பள்ளிக்கூடங்களில் பணியாற்றி வரும் நூற்றுக் கணக்கான ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பிலான அரசாங்கத்தின் முன்மொழிவுத் திட்டம் ஊடகங்கங்களின் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்து.
ஒன்டாரியோவில் தற்பொழுது கடமையாற்றி வரும் ஆசிரியர்களின் எண்ணி;கை மூன்று சதவீதத்தினால் குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நான்கு ஆண்டுகளில் ஒன்டாரியோ மாகாண அரசாங்கம் தற்போது கடமையில் உள்ள ஆசிரியர்களில் இருந்து 3475 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
முழு நேர அடிப்படையில் கடமையாற்றி வரும் ஆசிரியர்களை பணி நீக்குவதன் மூலம் 851 மில்லியன் டொலர்களை சேமிக்க முடியும் என்று முதல்வர் டக் ஃபோர்ட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொன்சவேடிவ் மாகாண அரசு எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Apr 05, 2019, 23:57 pm
597
Previous Postஎதிர்வரும் ஒக்ரோபர் மாதம் கனடாவில் நடைபெறவுள்ள தேர்தலில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகள்
Next Post2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது