முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

முன்னாள் ஐ.நா பொதுச் செயலாளரின் மறைவையொட்டி கனேடிய பிரதமர் இரங்கல் வெளியிட்டுள்ளார்

712

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அணான் அவர்களின் மறைவையொட்டி பிரதமர் ஜஸ்டின் ரூடோ உள்ளிட்ட கனேடிய அரசியல்வாதிகள் தமது அனுதாபங்களை வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில் சமூக வலைத்தளம் ஊடாக தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, 80 வயதான கோபி அணான் அவர்கள் உலகினை சிறந்த இடமாக மாற்றி அமைத்து்ள்ளார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் கோபி அணான் அவர்களின் எண்ணத்தினையும் செயல்களையும் தொடர்ந்து முன்னெடுத்து, உலகில் மேலும் மேலும் அமைதியை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகளை தொடர வேண்டியது நம் அனைவரது கடமை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை கோபி அணான் அவர்களுக்க கனடா மீது அளவுகடந்த பாசமும் அன்பும் இருந்ததாகவும், ஒவ்வொரு முறையும் அவர் கனடா வரும்போது அது தெளிவாக தெரிந்தது என்றும் முன்னாள் பிரதமர் போல் மார்ட்டினும(Paul Martin) தெரிவித்துள்ளார்.

உலகமயமாக்கலுக்கு உட்பட்டுள்ள இநத பன்னாட்டு அரங்கில் பல் மொழி, பல் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை முன்னிறுத்திச் செல்வதற்கான சிறந்த தலைமைத்துவத்தினை அவர் வழங்க வந்ததாகவும் முன்னாள் கனேடிய பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *