உருமாறிய கொரோனா வைரஸின் ஆபத்திலிருந்து கனடா முழுமையாக விடுபடவில்லை என்று பொதுசுகாதாரத்துறையின் தலைமை வைத்திய அதிகாரி வைத்தியர் தெரேசா மே தெரிவித்தார்.
தற்போதைய முடக்கல் நடவடிக்கைகளை விமர்சிப்பவர்கள் இந்த வைரஸின் ஆபத்தினை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இத்தகைய வைரஸ் கனடாவில் வியாபிக்க ஆரம்பிக்குமாயின் தற்போது நாளொன்றுக்கு அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்று முதல் நான்கு மடங்கால் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.