வெளிநாட்டு சக்திகளின் தலையீடு மற்றும் ஊழல் மோசடிகளுக்கு எதிராக குரல் கொடுத்த ஈராக்கைச் சேர்ந்த 51 அகவையுடைய பிரபல கவிஞரும் எழுத்தாளருமான Alaa masszoub இனம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டுள்ளார்.
கர்பாலா நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த ஆயளாணழரடி மீது இனந்தெரியாத நபர்களினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஊடகவியலாளர்கள் தொழிற்சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் கூட்டம் ஒன்றில் பங்கேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டை யார் மேற்கொண்டார்கள் என்பது பற்றிய தெளிவான தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் மோசடிகளுக்கு எதிராக குரல் கொடுத்த ஈராக்கைச் சேர்ந்த,பிரபல கவிஞரும் எழுத்தாளருமான Alaa masszoub இனம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டுள்ளார்.
Feb 04, 2019, 02:06 am
516
Previous Postதியாகி திருமலை நடராஜன் நினைவு நாள் - 04.02.2019
Next Postமேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சி , முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.