ஒன்ராரியோவில் உள்ள பொதுச்சுகாதார பிரிவுகள் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்காக தம்மிடத்தில் உள்ள தனிப்பட்ட இணைவழி பதிவு முறைகளை பயன்படுத்த முனைவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்ராரியோவில் உள்ள ஆறு பொதுச்சுகாதார பிரிவுகளே இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகாண அளவில் கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் பொதுசுகாதார பிரிவுகள் தமது சொந்த இணைவழிப்பதிவுகளை முன்னெடுப்பது பொருத்தமற்ற செயற்பாடாக அமையும் என்று மாகாண கொரோனா தடுப்பூசி விநியோக பிரிவுக்கு பொறுப்பான அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.