சிறிலங்கா பற்றிய மீளாய்வுக்காலம் ஆறு மாதங்களாக சுருக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.நா. தீர்மானத்தை தொடர்ச்சியாக சிறிலங்கா நிராரித்தால் மேலும் மேலும் நெருக்கடிகளே அதிகரிக்கும் என்று ஐ.நா.வுக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதியும், எதிர்க்கட்சித் தலைவரின் சர்வதேச உறவுகளுக்கான சிரேஷ்ட ஆலோசகருமான கலாநிதி தயான் ஜயத்திலக தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு மூன்று தெரிவுகளே காணப்படுகின்றன என்றும் அதில் எதனைத் தெரிவு செய்யப் போகின்றது என்பதிலேயே சிறிலங்காவின் எதிர்காலம் உள்ளதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா.தீர்மானத்தினை முழுமையாக நிராகரிப்பதாக இருந்தால் சர்வதேசத்தின் செயற்பாடுகளுக்கு முகங்கெடுக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.