முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா

384

வடக்கு மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 26 பேருக்கும், மன்னாரைச் சேர்ந்த 23 பேருக்கும், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்குமே நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா நகர கொத்தணியுடன் தொடர்புடைய 154 பேரின் மாதிரிகள் சிறி ஜெயவர்த்தனபுர ஆய்வுகூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடத்தப்பட்ட பரிசோதனையில், 20 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக,  வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை,  யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேரும், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த  6 பேரும் உள்ளடங்கியுள்ளனர், யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடக்கியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில், சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த சிறிலங்கா போக்குவரத்துச் சபையின் புத்தளம் சாலை ஊழியர் ஒருவர், விடுமுறையில் வந்திருந்த போது, நடத்தப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *