முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

486

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று தீவிரமடையத் தொடங்கியுள்ளதாகவும்,  புதிதாக 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் 32 பேருக்கும் அட்டாளைச்சேனையில் 6 பேருக்கும் வாழைச்சேனை பகுதியில் 4 பேருக்கும், ஆலையடிவேம்பு பகுதியில் ஒருவருக்குமே தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து, கிழக்கில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது.

அம்பாறை  மாவட்டத்தில் அதிகபட்சமாக 149 பேரும், மட்டக்களப்பில் 92 பேரும், திருகோணமலையில் 16 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *