முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

போராட்டங்களில் கலந்துகொள்வற்கு தடை உத்தரவுகள் – வீடியோ இணைப்பு

356

ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்வற்கு தடை உத்தரவுகள் வருகின்ற என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராகவே தடை உத்தரவுகள் போடப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையென திட்டமிடப்பட்ட போராட்டத்தில் கலந்துகொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த தடை உத்தரவு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி காவல்துறை பிரிவினால் எனக்கு மூன்றாம் திகதி முதல் ஆறாம் திகதி வரையிலான போராட்டத்தில் கலந்து கொள்வதனைத் தடை செய்யுமாறு களுவாஞ்சிக்கொடி நீதிமன்றங்களை நாடி பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவு என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதில், மிகவும் வேடிக்கையான விடயம், கொரோனாவினைக் காரணம் காட்டி நீதிமன்றங்களை நாடியுள்ளனர். ஆனால், கொழும்பில் கிழக்கு முனையம் துறைமுகத்தினை இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு காவல்துறையினரால் தடை உத்தரவு வழங்க முடியாது. ஏனென்றால் அது அரசாங்கத்துடன் தொடர்புடைய விடயம் என்று சுட்டிக்காட்டினார்.

அதுமட்டுமில்லாது இந்த தடை உத்தரவுகள் ஊடகவியலாளர்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *