மும்பையில் கடந்த ஒக்டோபர் மாதம் திடீரென ஏற்பட்ட பாரிய மின்தடை சீனாவின் சதிவேலை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மும்பையில் இணையத் தாக்குதல் காரணமாகவே, பாரிய மின்தடை ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது என்று மாநில மின்சாரதுறை அமைச்சர் நிதின் ராவத் தெரிவித்துள்ளார்.
முதல் கட்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளதாகவும், இது கண்டிப்பாக நாசவேலை தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் லடாக்கில் பதற்றம் உச்சத்தில் இருந்த நாட்களில், சீன இணைய முடக்கிகள், இந்தியாவின் மின்சாரத்துறை கணினிகளில் புகுந்து நாசவேலைகளில் ஈடுபட்டதாக, அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்றும் கண்டறிந்துள்ளது.
இந்தியாவின் தனித்துவம்மிக்க 10 மின்துறை நிறுவனங்களை இந்த இணைய முடக்கிக்கள் தங்கள் இலக்காக வைத்திருந்தனர் என்றும், அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.