மொன்ட்றியலில் (Montreal) வழிபாட்டுத் தலம் ஒன்றில் 100இற்கும் அதிகமானோர் ஒன்று கூடியதால் காவல்துறையினர் விரைந்து சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இறுதிச் சடங்கு ஒன்றின் போதே, குறித்த வழிபாட்டுத் தலத்தில் 100இற்கும் அதிகமானோர் ஒன்று கூடியதாக கூறப்படுகிறது.
அவர்களில் பலர், முக கவசங்களை அணியவில்லை என்றும், சமூக இடைவெளியை பேணவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு கொரோனா விதிமுறைகளை செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனினும் எவருக்கும், அபராதம் விதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.