அவுஸ்ரேலியாவின் மிகஉயர்ந்த அரசியல் அலுவலகங்கள் சிலவற்றில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகம், பாகுபாடு மற்றும் தவறான நடத்தைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் நீதி கோரி போராட்டம் நடத்தியுள்ளனர்.
2008ஆம் ஆண்டு முதல் அவுஸ்ரேலியாவில் கொல்லப்பட்ட பெண்களின் பெயர்களைக் கொண்ட ஒரு வெள்ளை பதாதையை தாங்கியபடி, மெல்பேர்னில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாக சென்றுள்ளனர்.
இதன்போது பெண்கள் கறுப்பு நிற ஆடையை அணிந்து கொண்டு ‘நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்’ என்று கோசமிட்டனர்.
அதே நேரத்தில் கன்பெராவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியேயும் போராட்டம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.