கரூரில் தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.வினர் இடையே ஏற்பட்ட மோதலில் 18 பேர் காயமடைந்தனர்.
கரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று இரவு வாக்கு சேகரித்து விட்டு சென்ற பின்னர், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில், அமைச்சரின் உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் 15 பேருக்கும், தி.மு.க. நிர்வாகிகள் 3 பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த அ.தி.மு.க.வினர் 15 பேரும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், தி.மு.கவினர் 3 பேரும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.