முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தொற்றினால் உயிரிழந்த இருவரின் உடல்கள் ஓட்டமாவடி பிரதேசத்தில் முதல் முறையாக அடக்கம்

213

சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த இருவரின் உடல்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தில் முதல் முறையாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் நீண்ட நாட்களாக கொரோனாவால் உயிரிழந்த தமது உறவுகளின் உடல்களை அடக்கம் செய்ய கோரி சிறுபான்மை மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

தேசிய மற்றும் சர்வதே அழுத்தங்களுக்கு மத்தியில் சிறிலங்கா அரசு கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

எனினும் அடக்கம் செய்வதற்கான நிலப்பகுதி தொடர்பில் மீண்டும் சர்ச்சை எழுந்தது.

ஒருவாராக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் கொரோனா தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சிபார்சு வழங்கப்பட்டது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *