கடந்த ஒரு வாரமாக தனிமைப்படுத்தப்பட்டு, முடக்கப்பட்டிருந்த வவுனியா நகரின் பல பகுதிகள் இன்று காலையில் விடுவிக்கப்பட்டுள்ளன.
பட்னிச்சூரில் இந்த மாத தொடக்கத்தில் கொரோனா தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, வவுனியா நகரப் பகுதி வர்த்தகர்கள் பணியாளர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பிரிசோதனையில் 170 பேருக்கு மேல் தொற்று அடையாளம் காணப்பட்டது.
இதையடுத்து, கடந்த ஒரு வாரமாக வவுனியா நகரில் பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், வவுனியா நகரில் உள்ள பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சூசைப்பிள்ளையார் குளம் வீதி, கந்தசாமி கோவில் வீதி, மில் வீதி ஆகியன தவிர்ந்த ஏனைய பகுதிகள், விடுவிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, வவுனியா நகரப் பகுதியில் இன்று காலை மக்கள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.