சீனாவை எதிர்க்க பிரதமர் நரேந்திர மோடிக்கு துணிச்சல் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இரண்டாவது கட்டமாக தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள ராகுல்காந்தி, தூத்துக்குடியில் நடந்த கலந்துரையாடலில் பேசிய போது,
“இந்தியாவின் சில முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் சீனா ஊடுருவியுள்ளது. முதலில் அவர்கள் டோக்லாம் (doklam) பகுதியில் நுழைந்து பார்த்தனர். இந்தியா எந்த எதிர்ப்பும் தெரிவிக்காததால், லடாக், அருணாச்சலப் பிரதேசத்தில் ஊடுருவினார்கள்.
அப்போதும் பிரதமர் மோடி, இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை என்றே கூறியதால், நூறு கிலோமீற்றருக்கு மேல் ஊடுருவியுள்ளனர்.
பிரதமரின் இந்தப் பேச்சு சீனாவுக்கு ஊக்கத்தைக் கொடுத்துள்ளதுடன் இந்தியப் பிரதமர் தைரியமற்றவர் என்ற எண்ணத்தையும் அவர்களுக்குக் கொடுத்துள்ளது.
பா.ஜ.க. ஆட்சி இருக்கும் வரை சீனாவிடம் இழந்த நிலத்தை இந்தியா மீண்டும் பெறமுடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.