கிளிநொச்சி – அம்பாள்குளத்தில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
ஆறுமுகம் திலகேஸ்வரி என்ற 37 வயதுடைய, குறித்த பெண்ணின் சடலம், பிரேதபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே, அவர் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பெண் கர்ப்பமாக இருந்துள்ளார் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.